இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்த முற்பட்டவர் கைது!!

Read Time:1 Minute, 25 Second

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்த முற்பட்ட ஒருவர் இந்தியாவின் புதுடில்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் அவர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இதனுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஹெரோய்ன் போதைப் பொருளை ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு கடத்தி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகின்ற போதைப் பொருள் வர்த்தகமாக இருக்கலாம் என்று சந்தேகம் வௌியிட்டுள்ள இந்தியப் பொலிஸார், டில்லி நகரம் ஹெரோய்ன் வர்த்தகர்களின் மத்திய நிலையமாக மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்!! (உலக செய்தி)
Next post பணியிடங்களில் பாலியல் தொல்லையா?