மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு!!
Read Time:47 Second
சந்தேகமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீகொட, அக்மீமன பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் உள்ள காண் ஒன்றில் இருந்து அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலகஹந்துவ, யகுகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating