3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 18 Second
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3 ஆவது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது.
அதன்படி பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசலுக்கு 95 காசுகளும் உயர்ந்தது. இந்த புதிய விலைப்படி ஒரு லீட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.79.87 ஆக இருந்தது.
இதைப்போல டீசல் விலை ரூ.72.43-ஐ எட்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-ஐ நெருங்கி இருக்கும் நிலையில் மும்பையில் ரூ.84.33-க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating