கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 54 Second

பொலிவியாவில் 1980 களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இது பற்றி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா பொலிஸார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்தனர். ஆட்கடத்தல் கும்பலில் சிக்கியிருந்த அந்த பெண்ணையும், அவரது மகனையும் இந்த மாத துவக்கத்தில் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.

கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதடு முத்த காட்சியில் நடித்த நடிகை! (சினிமா செய்தி)
Next post 2018 ல் பரிதாபமாக சினிமா உலகை விட்டு சென்ற நடிகர் நடிகைகள்!! (வீடியோ)