உடலுக்கு உரமூட்டும் கேழ்வரகு!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 58 Second

நமது அன்றாட உணவாக இருந்த சிறு தானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. முன்பெல்லாம், கேப்பை களி கிண்டாத வீடு, கேப்பை கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழா இருக்காது. சிறந்த உணவாக மட்டுமின்றி, நமது கலாச்சாரத்தோடும் நீண்டகால தொடர்புடையது கேழ்வரகு. `கேப்பை’, `ராகி’ என பல பெயர்களால் அழைக்கப்படும் சிறு தானியம் இது. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கேழ்வரகு, இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார் மற்றும் சில மாநிலங்களில் முக்கியமான பயிராக பயிரிடப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் இது. குறைந்த விலையில் கிடைக்கும் இதன் மகத்துவத்தும் மற்றும் மருத்துவ குணம் அதிகம். இவ்வளவு சத்துள்ள கேழ்வரகு சாப்பிடுவதால் என்னென்ன பலன் கிடைக்கும்? இதோ பட்டியல்…

* எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்களைவிட அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க இது உதவும்.
* இதில் உள்ள ட்ரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் பசியை கட்டுப்படுத்தும். அதனால், குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு ஏற்படும். அதனால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகப்பொருத்தமான உணவு.
* அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து கொண்டது. இது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycaemic Index Food) உணவு வகையை சேர்ந்தது. அதாவது, இதை உண்ட பின்னர் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்காது. கேழ்வரகை கூழாக குடிப்பதைவிட, களியாகவோ, ரொட்டியாகவோ உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் (Lecithin), மெத்தியோனின் ( Methionine) போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டவை.
* இதில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, உடலுக்கு வலிமை தரும்; ரத்தசோகை வராமல் தடுக்கும். ரத்தசோகை மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்து.
* உடல் சூட்டை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று. கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க செய்யும் நல்ல உணவு இது. இதிலுள்ள தாது சத்துகள் மனதுக்கு இதம் தந்து, மனஅழுத்தம் நீங்க உதவும்.
* இதில், அதிக அளவில் புரதம் உள்ளதால், உடலுக்கு வலிமை கிடைக்கும். உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய தானியம் இது.

* அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், உணவு எளிதில் ஜீரணமாக இது உதவும்; மலச்சிக்கல் பிரச்னைகளை தீர்க்கும்.
* தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு இது. குறிப்பாக, ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டிய தானியம்.
* கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான சத்துகளை தரும் சிறந்த தானியம் கேழ்வரகு. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்; குழந்தைபேறு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தபோக்கு மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் குறைபாட்டை சரிசெய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவராத்திரி இரவில் நடந்ததை புட்டு புட்டு வைத்த சீரியல் நடிகை நீலிமா!! ( வீடியோ)
Next post மன அமைதிக்கு சிறந்தது சவாசனம்!! (மகளிர் பக்கம்)