வாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 25 Second

நாட்டு மருத்துவம் என்கிற நலம் தரும் மருத்துவத்தில் இன்றைக்கு நாம் காண இருக்கும் மூலிகை பிண்ணாக்கு கீரை. இது எங்கு பார்த்தாலும் குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய செடி வகை ஆகும். இதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். தரையோடு தரையாக வளரும் இயல்புடையது பிண்ணாக்கு கீரை. இந்த பிண்ணாக்கு கீரை உடலில் ஏற்படும் வாய்வு தொடர்பான தொல்லைகளை குணப்படுத்தக் கூடிய தன்மை உடையதாகும்.

பிண்ணாக்கு என்பதை மாட்டுக்கு பால் சுரப்பதற்கு உதவும் வகையில் தொடர்புடைய ஒரு சொல்லாக கூறப்படுகிறது. அதே போல் இந்த செடியும் மாடுகளுக்கு பால் சுரப்பதற்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய வாத, பித்த கோளாறுகளை நிவாரணம் செய்ய கூடியதாகும். இதனால் வாதம் என்று அழைக்கக் கூடிய பக்க வாதம் போன்றவற்றை நீக்க கூடியதாகும். அதே போல் வயிறு வீக்கம் என்று சொல்லக் கூடிய கோளாறையும் சரி செய்யக் கூடிய திறன் இந்த பிண்ணாக்கு கீரைக்கு உள்ளது.இதை நாம் பல்வேறு வடிவங்களில் நமது உணவில் கலந்து சாப்பிடலாம். இந்த கீரையை பயன்படுத்தி வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேவையான உணவை நாம் தயாரிக்கலாம்.

பிண்ணாக்கு கீரை, சுக்கு பொடி, கடுக்காய் பொடி, மிளகு பொடி ஆகியவற்றை கொண்டு நாம் இந்த உணவை தயார் செய்யலாம். ஒரு பிடி பிண்ணாக்கு கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். 2 அல்லது 3 சிட்டிகை அளவுக்கு சுக்கு பொடியை சேர்க்க வேண்டும். ஒரு சிறிய அளவு கடுக்காய் பொடியும் சேர்க்கலாம். பிறகு கொஞ்சம் மிளகு பொடி சேர்க்கவும். சுவைக்காக தேவையான அளவு உப்பு. இந்த கலவையோடு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து இறக்கிய பிறகு இதை வடி கட்ட வேண்டும். இதை பருகுவதன் மூலம் வயிறு தொடர்பான கோளாறு மற்றும் வாத பித்த பிரச்னைகளை தடுக்கிறது.

அதே போல் இந்த கீரையை விளக்கெண்ணெய், ஆவார இலை பொடி, கடுக்காய் தோல் பொடி, நெல்லி வற்றல் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் பசையை மூட்டுகளில் வலியுள்ள இடத்தில் தடவுவதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.ஒரு பிடி பிண்ணாக்கு கீரை, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் நெல்லி வற்றல் பொடி, நீரை விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை தலையில் தடவினால் தலைவலி பறந்து விடும்.

மெலோசியா குர்கோரிபோரியா என்பது பிண்ணாக்கு கீரையின் தாவர பெயராகும். உடலில் விஷத்தை போக்கக் கூடியது. இதனால் பூச்சிகடிகளால் ஏற்படும் விஷத்தை போக்கும் தன்மையை கொண்டதாக இது விளங்குகிறது. வயிற்று வலி, சீத பேதி ஆகியவற்றை தடுக்கிறது. வயிற்று வீக்கத்தை கரைக்கிறது. வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் திறன் கொண்டதாக பிண்ணாக்கு கீரை விளங்குவதால் வயிற்றில் உருவாகும் புற்றுநோயை தடுக்கும் திறன் உடையதாக பிண்ணாக்கு கீரை விளங்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)
Next post நீர்கோவையை நீக்கும் அகத்திகீரை!! (மருத்துவம்)