வயிற்றுப் புண்களை ஆற்றும் ‘கருப்பு கசகசா’!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 7 Second

திருநீற்று பச்சிலையோட விதைகள்தான் சப்ஜா விதைகள். சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள். பழச்சாறு, லஸ்ஸி, ஃபலூடா போன்றவற்றில் சேர்க்கப்படும் இந்த கருப்பு கசகசாவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த விதைகளை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.

*பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.

* சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

*ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்றுப் பொருமல், கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும்.

* மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும்போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

* இதன் இலையின் சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்து வந்தால் பருக்கள் மறைவது மட்டும் இல்லாமல், தழும்பகள் தோன்றாமல் பாதுகாக்கும்.

* ஒரு கைப்பிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தினால், மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

*காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.

* கோடை காலத்தில் நன்னாரி சர்ப்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்!! (மகளிர் பக்கம்)
Next post விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்)