நோய்களை குணமாக்கும் தண்ணீர் சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 17 Second

உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல் நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!

தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றே கால் லிட்டர் (சுமார் ஆறு டம்ளர்கள்) அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது. தலைவலி, ரத்த அழுத்தம், ரத்தசோகை, கீல்வாதம், மூட்டுவலி, சாதாரண பக்கவாதம், ஊளைச்சதை, காதில் இரைச்சல், வேகமான இதயதுடிப்பு, மயக்கம், இருமல், ஆஸ்துமா, சளி தொல்லை, மூளைக் காய்ச்சல், கல்லீரல் சார்ந்த நோய்கள், சிறுநீரகக் குழாய் நோய்கள், பித்தக்கோளாறுகள், வாயுக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மூலம், மலச்சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய், அளவற்ற வெள்ளைப்படுதல், கருப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சார்ந்த நோய்கள் தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக் கொள்வது? காலையில் எழுந்தவுடன் (பல்துலக்கும் முன்பாகவே) 1250 மி.லி. தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட வேண்டும். இது சுமார் 6 டம்ளர் அளவாக இருக்கும் .1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக் கொள்வது நன்று. இதற்கு நமது முன்னோர்கள் உஷபானம் என்று பெயரிட்டுள்ளனர். குடித்த பின்னர் முகம் கழுவிக் கொள்ளலாம். காலையில் இப்படி தண்ணீர் குடித்தப் பின்னர், ஒரு மணி நேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ, பிஸ்கட், பழங்கள், தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப் பின்னர் படுக்கைக்குச் செல்லும் முன்பாக, நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடக்கூடிய பானங்கள் (மது மற்றும் போதை வஸ்துக்கள்) உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே, இரவே பல் துலக்கிக் கொள்வது நன்று. ஒரே மூச்சாக 1 .25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா? சில நாட்கள் சிரமம் தான். இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டு விட்டும் குடிக்கலாம்.

ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும். அதுவும் நன்மைக்கே! சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்? சரியான முறையில் ( மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது. தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூயநீரைக் குடிப்பதால், குடலை வலுவாக்குகிறது. மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புதுரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச் செய்கிறது.

இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டு விட்டன. குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப் பொருட்களை ரசமாக்கி உறிஞ்சும் போது புதுரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால், தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது. இப்படி தினமும் புதுரத்தம் உற்பத்தியாவதால், உடலில் அதுவரை இருந்து வந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.

இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.மலச்சிக்கல் ஒரேநாளில் குணமடைகிறது. வயிற்றுப் பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது. சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது. ரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும், புற்றுநோய் நான்கு மாதங்களிலும், க்ஷயரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது. இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:

மூட்டுவாதம், வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை, மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும், இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர் சிகிச்சையை செய்து வர வேண்டும். ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி, டீ, நொறுக்குத் தீனிகள் சாப்பிடக் கூடாது. இது வரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காற்றின் மூலமே பெரும்பாலும் கொரோனா பரவல்? (உலக செய்தி)
Next post காணிப் பிரச்சினையிலும் தொல்பொருள் பாதுகாப்பிலும் பாகுபாடற்ற அணுகுமுறை தேவை !! (கட்டுரை)