கொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் ? (கட்டுரை)

Read Time:4 Minute, 52 Second

கின்றன” என்று பிபிசியின் சுகாதார பிரிவின் ஆசிரியர் மைக்கேல் ராபர்ட்ஸ் கூறுகிறார்.

இந்த கூற்றுக்கள் குறித்து கேரி மடேஜிடம் பிபிசி கருத்து கேட்டுள்ளது, ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மனிதர்கள் மீதான ஆரம்பகட்ட பரிசோதனையின் முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டபோது அதன் நம்பகத்தன்மை குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்றது.

குறிப்பாக சில ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தாங்கள் “சோதனை எலிகளை” போன்று பயன்படுத்தப்படுவோம் என்பதால் தங்களுக்கு இந்த தடுப்பு மருந்து வேண்டாம் என்றும் இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய துரிதகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களது பதிவுகளில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது பாதுகாப்பு குறித்த கவலைகளை சிலருக்கு ஏற்படுத்தி இருந்தாலும், தடுப்பு மருந்து பரிசோதனையின் அனைத்து மட்டங்களிலும் கடுமையான பாதுகாப்பு செயல்முறைகள் கடைபிடிக்கப்படுவதாக இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து குழுவின் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறினார்.

தடுப்பு மருந்து குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உள்ள முன்னனுபவம், விரைவான நிதி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நிர்வாக ஒப்புதல்கள், பெருத்த எதிர்பார்ப்பு, தானாக சோதனையில் பங்கேற்க முன்வந்த மக்கள் உள்ளிட்ட காரணங்களால் தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் முதல் கட்டம் வேகமாக நிறைவடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தற்போது தொடங்கியுள்ள அடுத்த கட்ட பரிசோதனையில் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்பர் என்பதால் அவர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தால் பக்கவிளைவு ஏதாவது ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட உள்ளது. முதல் கட்டத்தில் தடுப்பு மருந்தால் ஆபத்தான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும் அதில் பங்கேற்ற 16-18% தன்னார்வலர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனினும், பாரசிட்டமால் மூலம் அந்த பக்க விளைவுகளை நிர்வகிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் மீம் ஒன்றில் 1918இல் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலால் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்தே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அது முற்றிலும் தவறான கருத்து.

முதலாக, அந்த காலகட்டத்தில் இதுபோன்ற நோய்த்தொற்றுகளுக்கு எவ்வித தடுப்பு மருந்தும் பயன்பாட்டில் இல்லை என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு கூறுகிறது.

அந்த காலக்கட்டத்தில் பரவிய காய்ச்சல் ஒரு வைரஸ் என்பது கூட அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

எனினும், ஸ்பானிஷ் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அதாவது, காய்ச்சல் தொற்று முதன்மையாகவும், வைரஸால் தூண்டப்பட்ட வலுவான நோயெதிர்ப்பு ஆற்றலால் நுரையீரலில் திரவம் சேர்ந்ததும் காரணமாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு!! (மருத்துவம்)
Next post இந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு!! (வீடியோ)