மரபணு மாற்ற உணவுகள்…!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 32 Second

உலகம் முழுவதும் மரபணு மாற்று விதையை பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன. ஆரோக்கியம் தொடர்பாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ராயல்ட்டி ரீதியாகவும் முடிவில்லா சர்ச்சைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சமீபகாலமாக ஏற்படும் காய்கறி தட்டுப்பாடு, விலை உயர்வுக்குப் பின்னாலும் இந்த மரபணு மாற்றம் முக்கியக் காரணியாக இருக்கிறது என்கிறார்கள். எனவே, இது பற்றிய முக்கிய முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது.

மரபணு மாற்றம் என்பது என்ன?

ஒவ்வோர் உயிரின் செல்களில் DNA என்ற மூலக்கூறு உண்டு. வைரஸில் இருப்பது RNA. தாவரங்களின் செல்லில் இருப்பது DNA மூலக்கூறு இந்த DNA மூலக்கூற்றை மாற்றி விளைக்கப்படுவதுதான் மரபணு மாற்று காய்கறிகள் அல்லது பயிர்கள். மரபணு மாற்று காய்கறிகளின் (பயிர்களின்) நன்மையாக இதுவரை முன்னெடுக்கப்படுவது அதிகரித்து வரும் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது, உரங்களின் தேவையைக் குறைப்பது, குறைந்த காலத்தில் விளைச்சலின் பலனை அனுபவிப்பது, விளைச்சல் பன்மடங்கு அதிகரிப்பது, அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையதாக இருக்கும் விதைகளை உருவாக்குவது என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகள் கூறப்படுகிறது. ஆனால், விவசாயத்தின் மூலம் அதிக பொருளாதார லாபம் பெற வணிக நிறுவனங்களின் பேராசையே இதற்குக் காரணம் என்று இயற்கை ஆர்வலர்களும் மாற்று மருத்துவர்களும் கூறுகிறார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றல்ல…

அமெரிக்காவில் 80% மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டே விவசாயம் நடைபெறுகிறது. அவர்கள் அதை விவசாய பொருளாதாரமாகவேதான் பார்க்கின்றனர். ஆனால், விவசாயத்தினை குறித்து இந்திய மக்களின் பார்வை என்பது அதனை தவமாகவே கருதுகின்றனர். மேலை நாடுகளில் ஓர் உணவினை பார்க்கும் விதம் என்பது அறிவியல் பூர்வ நோக்கோடு உணவின் Nutritional value-வைக் கொண்டே கணக்கிடுகின்றனர். இந்தியர்களின் பார்வையும் இதில் வேறு. இந்தியா உள்ளிட்ட பாரம்பரிய கலாசாரம் உள்ள உலகின் எல்லா நாட்டிலும் (இந்தியாவில்) உணவினை அதன் தன்மையைக் கொண்டே கணக்கிடுகின்றனர்.

One man food… another man poison…

இயற்கை தட்ப வெட்பநிலைக்கு ஏற்ப நாட்டிற்கு ஏற்ப உணவினை விளைவிக்கிறது. நம் நாட்டில் குளிர்காலத்தில் ஒரு சில பொருட்களையும், கோடை காலத்திலும் ஒரு சில பொருட்களையும் விளைவித்து கொடுத்து இயற்கை நன்மை பயக்கிறது. நம் உடலில் ஏற்படும் நோய்களை வர விடாமல் தடுக்கிறது. நச்சுக்களை நீக்குகிறது. நம் குடும்பங்களில் பாரம்பரியமாகவே உணவு பற்றிய புரிதல் உண்டு. ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு மற்றவருக்கு ஒத்துகொள்ளாது என்பது அனைவருக்குமே தெரியும். ஏன் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு கத்தரிக்காய் ஒத்துக் கொள்ளும். மற்றொருவருக்கு ஒத்துக்கொள்ளாது. இதற்கு உடல்ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும் ஆங்கிலத்தில் கூறப்படும் பழமொழி ஒன்று இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது. One man food… another man poison… என்று சொல்வார்கள். ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவானது மற்றவருக்கு ஒத்துப்போவதில்லை.

இயற்கையாகவே விளையும் பொருட்களிலேயே இத்தகைய பாகுபாடு உண்டு. இப்படி இருக்க மரபணு மாற்றம் பெற்ற பயிர்களினால் DNA-வில் செயற்கையாக மாற்றம் ஏற்படும்போது எவ்வகையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணிக்க இயலாது. இயற்கை எல்லாம் தரும் இயற்கையாக வளரும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் மருத்துவ குணம் இருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் தேவையான சத்து நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதேபோல் மறுபக்கம் பார்க்கும்போது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார்போல் அந்த மண்ணில் விளையும் உணவு வகைகளை உட்கொள்ளும்போது சத்தும் கிடைக்கப் பெறுகிறது. அப்படி எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் உள்ள குறைகளை நீக்கி, நமக்கு தேவையான சத்தையும் கொடுக்கிறது. உணவுகளுக்கும் குணாதிசயங்கள் உண்டு என சித்த மருத்துவம் கூறுகிறது. வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் வெளிப்புறத்தில்

வேண்டுமானால் உண்மையான காய்கறிகள் போன்று தோற்றம் தரலாம். ஆனால், DNA மரபணு மாற்றப்பட்ட காய்கறி என்பதால் உண்மையான சத்தோ அல்லது சுவையோ உட்கொள்ளும்போது நமக்கு கிடைக்காது. வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளுக்கும், மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறிகளுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. அதற்கு பொதுவான காரணம் பூச்சிக்கொல்லி மற்றும் உரம் பயன்பாடுதான். நம் முன்னோர்கள் சொன்னதுபோல் இயற்கையாக விளையக்கூடிய காய்களில் கத்தரிக்காயில் சூடு இருக்கிறது; வெங்காயத்தில் குளிர்ச்சி இருக்கிறது. இப்படியாக ஒவ்வோர் உணவுக்கும் குணத்திற்கும் ஏற்றார்போல் சுவை, வீரியம், பிரிவு என நம் உடலில் சென்று பிரிந்து உடலுக்கு தேவையான சத்துகளை கொடுக்கிறது என்று அறிவியலும் கூறுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Specific food என்று அழைப்பார்கள்.

இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளில் இவ்வளவு பயன்கள் இருக்கிறது என்றால் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை உட்கொள்ளும்போது எந்த மாதிரியான எதிர்மறையான புரதத்தை உருவாக்கும், அதனால் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். என்ன நடக்கும்? மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளும்போது அலர்ஜியால் முதலில் பாதிக்கப்படுவர். உதாரணமாக, இத்தனை நாட்கள் கத்தரிக்காய் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நீங்கள் இந்த மரபணு மாற்று கத்தரிக்காயை சாப்பிடும்போது உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளால் மலட்டுத்தன்மை, அழற்சி அல்லது புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கிறது.

மனிதனின் DNA கூட பாதிக்கப்படலாம். உங்கள் உடலில் Anti virus பரவ ஆரம்பிக்கும். என்னதான் நுண் தொற்று இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி ஆதிக்கம் அதிகம் இருப்பதால் நோய்வாய்ப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு Antibiotic resistance எனவும் கூறுவர். எந்த மருந்து கொடுத்தாலும் அடங்காது. காரணம் ஒவ்வொரு முறையும் காலத்திற்கு ஏற்ப கிருமிகள் வளர்ச்சியடைகிறது. அதனால்தான் அதற்கு பெயர் Super bugs என அழைக்கப்படுகிறது.

பாதிக்கப்படும் பல்லுயிர்ச்சூழல்

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை மூலமாக மரபணு மாற்றப்பட்ட பயிரிலிருந்து, மரபணு மாற்றப்படாத பயிர்களுக்கு காற்றின் மூலம் நச்சுக்கள் பரிமாற்றம் நடைபெறுகிறது. கெட்ட மகரந்தச் சேர்க்கை பரிமாற்றத்தால் நல்ல விளைச்சலும் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது தாவரங்களும் உணவு விளைச்சலும் நச்சுத்தன்மை அடைய வாய்ப்பிருக்கிறது. விவசாய நிலமும் பாதிக்கப்படும். அதுமட்டும் அல்லாமல் பல்லுயிர்(Bio diversity) அதாவது பால் தரும் பசு எவ்வாறு புல்லையும் இலையையும் நம்பி இருக்கிறதோ, அதுபோல மனிதன் மண்ணையும் அதில் விளையும் விளைச்சலையும் நம்பி இருக்கும் நிலையில் நச்சுத்தன்மை இருந்தால், எவ்வாறு பல்லுயிர் தாக்கப்படுவதோடு ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை சார்ந்து இருக்கும் என்ற அறிவியல் சுழற்சி கோட்பாடும் இங்கு பாதிக்கப்படும். மரபணு மாற்றுவிதையால் இவ்வளவு பாதிப்புகள் இருக்கின்றன. எனவே, பொருளாதார அடிப்படையில் நிறைய உணவு உற்பத்தியாக வேண்டும் என்பதற்காக இப்படி மரபணு மாற்று விதைகள் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.

காய்கறி தட்டுப்பாட்டுக்கும் காரணம்

சமீபத்தில் ஏற்பட்ட வெங்காய தட்டுப்பாடு பிரச்னைக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைதான் காரணமாக இருந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். நீண்ட நாள் பயன்பாட்டுக்கு உள்ள வெங்காயம் குறுகிய காலத்தில், பயன்பாடற்ற பொருளாக மாற மரபணு மாற்று காய்கறிகள்தான் காரணமாகிறது. விலை ஏற்றத்திற்கும் இதுவும் ஒரு காரணமாகியது. இப்படியாக ஒவ்வொன்றாக மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளால் பிரச்னை எழும். ஏற்கெனவே மரபணு ரீதியாக மனித இனம் அநேக நோய்களை சந்தித்து வரும் இச்சூழ்நிலையில், இப்படி மரபணு மாற்று பயிர்களாலும் ஆபத்து அதிகமாகவே செய்யும். சித்த மருத்துவம் கூறுவதுபோல் ஒவ்வோர் உணவுக்கும் குணம் உண்டு. நாம் உண்ணும் உணவுகள் மரபணு மாற்றம் பெறும்போது அதன் இயல்பான சுவை, குணம், வீரியம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, மரபணு மாற்று விதை உடலுக்கு கண்டிப்பாக ஆபத்து விளைவிக்கக் கூடியதுதான். விற்பவர்கள் எல்லாவற்றையும்தான் விற்பார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி!! (மருத்துவம்)
Next post தென்னிந்திய மக்கள் நாடக விழா!! (மகளிர் பக்கம்)