திருமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை
Read Time:45 Second
திருணோமலை பாலையூற்றில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் சிறிலங்கா ஊர்காவல் படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
கொல்லப்பட்ட ஊர்காவல் படை வீரர் சீனன்குடாவைச் சேர்ந்த அசித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் அப்பகுதியை சுற்றிவைளத்து தேடுதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.