ஊறுகாய் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 34 Second

கோடை சீசன் வந்து விட்டாலே ஊறுகாய்தான் நினைவில் வரும். மாங்காய், கிடாரங்காய், எலுமிச்சங்காய்களில் ஊறுகாய் போடுவது மட்டுமில்லாமல் அசைவத்திலும் ஊறுகாய் என வெரைட்டிகளுக்கு அளவே இல்லை. இப்படி பலவிதமான ஊறுகாய் போடும் போது சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

*ஊறுகாயின் ராணியான ஆவக்காய்க்கு மாங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அப்போதுதான் பறித்த காய்கள் என்றால் உடனே நறுக்கி ஊறுகாய் போடலாம். மறுநாள் ஊறுகாய் போட வேண்டுமெனில் காயை தண்ணீரில் போட்டு வைக்க பழுக்காது, முற்றாது. தோல் சுறுங்காமல் இருக்கும்.

*சிலவகை ஊறுகாய்க்கு எண்ணெய் அப்படியே ஊற்ற வேண்டும். சிலவகைகளுக்கு எண்ணெயை சூடாக்கி ஆறவைத்தே ஊற்ற வேண்டும்.

*ஊறுகாய்க்கு மிளகாய் சிவப்பாக, புதியதாக இருக்க வேண்டும். நாள்பட்ட மக்கிய வண்டுகள் உள்ள மிளகாய் ஊறுகாயைச் சீக்கிரம் கெடச் செய்துவிடும்.

*புளியும், மிளகாயும் புதியதாக பளிச்சென்று இருந்தால்தான் ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும்.

*ஊறுகாய்க்கு கழுவி துடைத்து, உலர்த்திப் பயன்படுத்த வேண்டிய பொருட்களை கொஞ்சம் தாமதமாக உலர்ந்தாலும் சரி என நிழலில்தான் உலர்த்த வேண்டும்.

*வடு மாங்காய்க்கு மாங்காய் உருண்டை வடிவத்தில் வாங்க வேண்டும். நீள வடிவ மாங்காய் துவர்க்கும்.

*சரியான அளவில், சரியான முறையில் போடும் ஊறுகாய் பலநாட்கள் கெடாது. கெடாமல் இருக்க ஒரு சிட்டிகை சோடியம் பென்சோஸிட் சேர்க்கலாம்.

*கல் உப்பு போட்டால்தான் அளவு சரியாக, சுவை நன்றாக இருக்கும்.

*பூண்டு ஊறுகாய்க்கு பெரிய பற்கள் கொண்ட பூண்டைவிட மலைப் பூண்டே சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடையை எதிர்பார்த்திருக்கும் பனை விசிறி தம்பதியினர்!! (மகளிர் பக்கம்)
Next post டப்பிங் பேச மஞ்சப் பையுடன் கிளம்பி வந்தேன்! டப்பிங் கலைஞர் கிருத்திகா!! (மகளிர் பக்கம்)