கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 13 Second

* ஃப்ரிட்ஜில் வைக்கும் பொருட்களை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் ஒரு பொருளின் வாசனை மற்ற பொருட்களின் மீது படியாது.
* சிட்ரிக் ஆசிட் ஒரு சிட்டிகை குக்கர் தண்ணீரில் தூவி விட்டால் போதும் குக்கரின் உட்பக்கம் பளிச்சிடும்.
* குக்கரில் இரண்டு மூன்று பொருட்களை வேக விடும் போது மேல் தட்டில் பருப்பு வகைகளை வைக்கக் கூடாது. பருப்பு பொங்கி ஆவி வரும் துவாரத்தை அடைத்துக் கொண்டால் குக்கர் வெடித்து விடும் அபாயமும் உண்டு.

– அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*உருளைக் கிழங்கை வெங்காயத்துடன் போட்டு வைக்கக் கூடாது. சீக்கிரம் கெட்டுவிடும்.
*நெய் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் ஒரு துண்டு வெல்லத்தைப் போட்டு வைக்க வேண்டும்.
*கேக், பிஸ்கெட்களை ஒரே பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்து விடும். ஆகவே தனித்தனி பாத்திரங்களில் பத்திரப்படுத்த வேண்டும்.
*முட்டை முப்பது நாட்கள் கெடாமல் இருக்க அதன் மேல் சமையல் எண்ணெயை பிரஷ்ஷால் தடவி வையுங்கள்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* பார்லியில் சுண்டல் செய்யும்போது அதனுடன் ஸ்வீட் கார்ன் போன்று இனிப்பானதை சேர்த்து செய்ய சுவை அதிகரிக்கும்.
* பருப்பு வடை மீந்து விட்டால், மறு நாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்க உசிலி சுவையாக இருக்கும்.
* கார சுண்டலுக்கு இஞ்சி, பெருங்காயம் சேர்த்தும், இனிப்பு சுண்டலுக்கு சுக்கு சேர்த்தும் செய்ய வாயு பிரச்னை
ஏற்படாது.
* சிறு குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் பானிபூரிகளை கொண்டு தனி தட்டில் வைத்து தயாரித்த சுண்டல், ஓமப்பொடி, கொத்தமல்லி தழை என அலங்கரித்து கொடுக்க மீதம் வெக்காமல் சாப்பிட்டு விடுவர்.

– மகாலஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

* கிழங்குகளை வேகவைக்கும் போது உப்பு சேர்த்தால் சரியாக வேகாது. வெந்தபின்பே உப்பு சேர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கை தோல் சீவாமல்,
கழுவிவிட்டு சமைக்க வேண்டும். அதில் உள்ள வாய்வுக்கு தோலே மருந்து ஆகிறது.
* உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
* கருணை, சேனைக் கிழங்குகளை வாங்கி ஒரு வாரம் கழித்து சமைத்தால் தொண்டை நாக்கில் அரிக்காது.

– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

* உப்பு ஜாடியில் ஈரம் கசிகிறதா? பிடி அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரம் போயே போச்சு.
* பாதுஷா ஸ்வீட் செய்யும் போது மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாயிருக்கும்.
* கடலை மாவு, அரிசி மாவு இல்லாவிட்டால் கோதுமை மாவிலும் பஜ்ஜி செய்யலாம்.

– விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

* சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை அது உறிஞ்சி விடும்.
* பாயசம் நீர்த்து விட்டால், பருப்பு பாயசமோ, ஜவ்வரிசி பாயசமோ எதுவாக இருந்தாலும் அதில் இரண்டு டீஸ்பூன் சோள மாவு கலந்து கிளறி
5 நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதும் பாயசம் கெட்டியாகிவிடும்.

– எம்.வசந்தா, சென்னை.

* எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கலந்து கொண்டால் சாதம் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* இட்லி மாவு குறைவாக இருந்தால் ரவையை வறுத்து கலந்து சிறிது நேரம் ஊறியதும், பிறகு தோசை வார்த்தால் தோசை மொறுமொறுவென்றுசுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு கரைக்கும்போது சிறிதளவு ஜவ்வரிசி கலந்து அரைத்து, தோசை வார்த்தால் சுவையான
மெல்லிய தோசை வரும்.

– எஸ்.ஆஷாதேவி, சென்னை.

* பருப்பு பொடி தயாரிக்கும்போது, இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.
* மணத்தக்காளிக் கீரையை வதக்கி, கடலைபருப்பை வறுத்து அதையும், மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையாக இருக்கும்.
* கோவக்காயை நறுக்கி சிறிய கிண்ணத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.

– எஸ்.பாரதி, மதுரை.

நெய் களி

தேவையானவை: ½ கிலோ பச்சரிசி, ½ கிலோ வறுத்த சிறுபருப்பு, ¾ கிலோ கருப்பட்டிஅல்லது வெல்லம், ஏலக்காய் தூள்.

செய்முறை: அரிசியையும், பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை மாவுபோல் அரைக்கவும். வெல்லத்தை பொடித்து மண் நீக்கி வடிகட்டி எடுக்கவும். அடுப்பில் சட்டியை வைத்து அரைத்த கலவையை சிறிது நெய் ஊற்றிய பின் அதில் சேர்த்து சிறு தீயில் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். கிளறி கட்டியாக வரும் போது விரும்புபவர்கள் பாதாம், முந்திரி, திராட்சை சேர்க்கலாம். அடிப்பிடிக்காமல் கிளறி அல்வா பதம் வந்ததும் விருப்பமான பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் கிராமத்து பலகாரம் நெய் களி ரெடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 90-களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பொம்மைகள்! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்!! (மருத்துவம்)