யாழில் த.தே.கூ.. வேட்பாளர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 29 Second

rivolver-1.bmpயாழ். அச்சுவேலியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பயித்தோலைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் மாதர் செல்லத்துரை (வயது 75) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்றவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இவரை வீதிக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனிடையே அச்சுவேலி தெற்கினைச் சேர்ந்த வர்த்தகர் சின்னராசா புவிராசா (வயது 25) என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இவருடன் பயணித்த சதாசிவம் ராம்குமார் (வயது 24) என்ற இளைஞர் காயமடைந்த நிலையில், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கைது செய்யப்பட்ட அகதிகள்
Next post ஊர்காவற்றுறையில் துப்பாக்கிச் சூடு: ஈ.பி.டி.பி. உறுப்பினர் காயம்