ஊர்காவற்றுறையில் துப்பாக்கிச் சூடு: ஈ.பி.டி.பி. உறுப்பினர் காயம்
Read Time:58 Second
யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் பிள்ளையார் கோயிலடியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியவில் இடம்பெற்றுள்ளது.
என்.ஜெகதீஸ்வரன் (வயது 29) என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினரே காயமடைந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த இவர், யாழ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தை அடுத்து சிறிலங்கா கடற்படையினர் கோயில் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.