மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல்

Read Time:1 Minute, 11 Second

Slk.Army.Powser.jpg
மட்டக்ளப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் ஊரணி என்ற இடத்தில் நேற்று (26.05.2006) நண்பகல் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டது. பவுசர் சிறிது சேதத்திற்குள்ளான பேதும் பவுசரில் சென்ற இராணுவத்தினருக்கு சேதம் எதுவுமில்லை.
மலசலக்கூடக் கழிவுகளை வாவியோரக் காட்டுப் பகுதியில் குழியொன்றில் கொட்டிவிட்டு முகாமை நோக்கித் திரும்பிய வாகனம் உரிய இடத்தைக் கடந்த பின்னரே கிளேமோh குணடு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு இராணுவ தலைமையகம் மற்றும் கல்லடி பயிற்சி முகாம் ஆகிய இடங்களிலுள்ள மலசலகூடக் கழிவுகளை அகற்றுவதற்கெனப் பயன்படுத்தப்படும் இவ்வாகனத்தில் படையினர்கள் மூன்றுபேர் பயணம் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஊர்காவற்றுறையில் துப்பாக்கிச் சூடு: ஈ.பி.டி.பி. உறுப்பினர் காயம்
Next post இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம்