நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -அஸ்கிரிய தேரர்!
Read Time:58 Second
நோர்வேக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம சிறீ புத்தரகித்த தேரர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒஸ்லோவில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இதுவரையில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமை வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உடுகம சிறீ புத்தரகித்த தேரர் வேண்டுகோள் விடுத்தார்.
Average Rating