புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிப்பு -ஜனாதிபதி
வன்னியில் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இன்றுகாலை புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ஆளில்லா விமானம்மூலம் அவதானிக்கப்பட்டதாகவும், ஆளில்லா விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ஆதாரமாகக் கொண்டே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது. புலிகள் தங்கியிருக்கும் பகுதிகளில் புலிகள் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்களின் நிலை மற்றும் அவர்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் நிலை என்பவற்றை அந்த விமானம் அவதானித்து படமெடுத்திருப்பதாகவும், குறுகிய பிரதேசத்தில் மக்களும் புலிகளும் இருப்பதை அவதானித்துள்ளதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர் என்பதை அதன்மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் புலிகள் ஈடுபடுவதை அறியக் கூடியதாகவுள்ளதுடன், மக்களை முழுமையாக விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதில் தாம் வெற்றியடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் என்றும் ஏ.எப்.பி மேலும் தெரிவித்துள்ளது.
Average Rating