இந்தியப் புடவை வியாபாரிகள் மீண்டும் கடத்தல் அச்சத்தால் இந்தியப் புடவை வியாபாரிகள் பலரும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர்

Read Time:1 Minute, 24 Second

indea-flag2.gifஇந்தியப் புடவை வியாபாரிகள் மீண்டும் கடத்தல் அச்சத்தால் இந்தியப் புடவை வியாபாரிகள் பலரும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர் – மட்டக்களப்பில் இரண்டு இந்திய புடவை வியாபாரிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 43வயதுடைய ராதாகிருஷ்ணன், 33வயதுடைய அன்டன் முருகேசு ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டவர்களாவர். இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். புடவை வியாபாரத்திற்கு சென்றபோதே இவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த 18ம்திகதி கடத்தப்பட்ட மற்றுமொரு இந்திய புடவை வியாபாரி மட்டக்களப்பு, வாழைச்சேனையை அண்மித்துள்ள கல்மடு பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்களையடுத்து இந்திய புடவை வியாபாரிகள் அச்சம் காரணமாக நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை
Next post புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்பிய சிறுவர்கள் இராணுவ முகாமில் தஞ்சம