நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை
Read Time:1 Minute, 26 Second
நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை- மட்டக்களப்பு கள்ளியங்காட்டுப் பகுதியில் வடக்குக்கிழக்கு நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தி திட்ட மாகாண பிரதிப் பணிப்பாளரான நற்பிட்டி முனையைச் சேர்ந்த ரட்ணம் ரட்ணராஜா நேற்று பிற்பகல் 2.15மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் 37வயதுடைய கே.சந்திரசேகரன் என்கிற வாகன சாரதி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாதநபர்களினால் இவர் சுடப்பட்டதாகவும் இவருக்கு நாட்டுப் பற்றாளர் பட்டம் வழங்குவதாகவும் புலிகள் அறிவித்துள்ள இதேவேளை
மட்டக்களப்பு அபிவிருத்தியில் முனைப்புடன் செயல்பட்ட இவரை பிரபாகுழுவினரே கொலை செய்துவிட்டு தற்போது மக்களைத் திசைதிருப்புவாற்காக நாட்டுபற்றானர் பட்டம் வழங்கியுள்ளனரென கருணாதரப்பினர் அறிவித்துள்ளனர்.