த.தே.கூட்டமைப்பினரின் நடமாட்டத்தை ஆராய வேண்டும்: மஹிந்த அமரவீர
Read Time:1 Minute, 19 Second
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாட்டங்களை ஆராயவேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சீருடையின்றி ஆயுதங்களுடன் மக்களோடு மக்களாக இருப்பதாகக் கூறிய அமைச்சர், இதனைப்போலவே, கூட்டமைப்பினரும் சீருடையின்றி இங்கு இருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, அவர்களின் நடமாட்டம் குறித்து ஆராயப்படவேண்டுமெனவும் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவர் கூறினார். சமாதானப் பேச்சு, யுத்தநிறுத்தம் தொடர்பில் பல்வேறு அனுபவங்களை கடந்த காலங்களில் தாம் பெற்றுக்கொண்டிருப்பதுடன்,இந்த நிலையில், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோருவதைப்போன்ற இவ்வாறான தவறுகளை செய்வதற்கு அரசாங்கம் தயாரில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Average Rating