பிரபாகரன் தப்பிக்க தயாராக இருந்த நீர்மூழ்கி : இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர்..

Read Time:2 Minute, 16 Second

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் தப்பிப்பதற்காக தயாராக இருந்த நீர்மூழ்கியை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். வன்னிபகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் மேஜர் ஜெனரல் ஜகத்ஜெயசூரியா தலைமையிலான படையினர் சோதனை நடத்தினர். அங்குலம், அங்குலமாக நடந்த சோதனையில் 360 அடி நீளம், 25 அடி அகலத்தில் உலோகத்தில் வடிவமைக்கப்பட்ட வீடு போன்ற படகை கண்டு பிடித்தனர். தனியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த படகுக்கான சுழலிகளும் மீட்கப்பட்டது. 3 பிரிவாக பிரித்து கட்டப்பட்டிருந்த அந்த படகு, நீர் மூழ்கிகள் வகையை சேர்ந்தது. படகின் முன்பகுதியில் என்ஜினும், இதர கருவிகளுடன் கூடிய அறையும் இருந்தது. படகின் கடைசி பகுதியில் குண்டுகள் துளைக்க முடியாத உலோக அறை இருந்தது. ரெயில் தண்டவாளம் போல் இருந்த பாதைகளுக்கு மேல் அந்த அறை தூக்கி வைக்கப்பட்டிருந்தது. படகை தொடும் அளவில் ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டிருந்தது. நெருக்கடியான நேரத்தில் இந்த நீர் மூழ்கி படகினை கரையில் இருந்து நேரடியாக கடலுக்குள் செலுத்தி விரைவில் தப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரத்யேக வாய்க்காலை யாரும் கண்டு பிடிக்க முடியாத வகையில் அதன் இரு புறங்களிலும் உலோக தகடுகள் பொருத்தப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனை தப்பிக்க வைபதற்காகவே இந்த நீர் மூழ்கி படகு தயார் நிலையில் இருந்ததாக இலங்கை ராணுவத்தினர் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “பிரபாகரன் தப்பிக்க தயாராக இருந்த நீர்மூழ்கி : இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர்..

  1. தமிழனின் சாபக்கேடு
    தன பிள்ளைகளை படிபித்து கொண்டு எம் பிள்ளைகளை மாவீரராக்கி வெளி நாட்டு புலன் பெயர்ந்த மக்குகளிடம் கோடி கோடி யாக பணம் சேர்த்து தன பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி தானும் நீச்சல் தடாகம் முதல் எல்லாம் கட்டி நல்லாக திண்டு குளித்து நீந்தி அனுபவித்து விட்டு இப்போ தனது பாதுகாப்புக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை தானே இன்னொரு பக்கத்தில் இருந்து ஷெல் அனுப்பி கமெராவும் வீடியோவும் ரெடியாக படம் எடுத்து பொய் பிரச்சாரம் மூலம் தன்னை காப்பாத்த யாராவது வெளிநாட்டு அல்லது ஐநாகாரர் வந்தால் அவர் காலில் சரண் அடைந்து ராஜபக்சேவிடமிருந்து தப்பலாம் என்று பிரபாகரன் பிளான் பண்ணி இருக்கிறான்.
    ஒன்றும் சரிவராடி ரெட் குரோஸ் காரரை தாக்கி விட்டு பழியை அரசாங்கத்தில் போட்டு விட்டு பாக்க வருகிற ரெட் குரோஸ் காரிடம் சரண் அடைவது தான் கடைசி வழியாம்.

Leave a Reply

Previous post இலங்கைக்கான ஐ.நாஇன் தூதுவராக பில் கிளின்டன் அல்லது கொபி அனானை நியமிக்குமாறு கோரிக்கை
Next post கிழக்கு சிறுவர் படுகொலையுடன் ரிஎம்விபி எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு -பிரதி காவல்துறை மா அதிபர்!