பிரித்தானிய ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்கள் இரத்து!!

Read Time:1 Minute, 59 Second

இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் சனல்4 ஊடக நிறுவத்தின் ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்களே இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு ஊடகவியலாளரான ஊடகவியலாளர் நிக் பெற்றன் வோல்சன் இலங்கை தொடர்பாக பிழையான தகவல்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களின் விசா இரத்துச் செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.பி.அபேகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று நிக் பெற்றன் வோல்சன் தமது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஊடகவியலாளர் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டுமாயின் முன்கூட்டியே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியைப் பெறவேண்டுமென்று பி.பி.அபேகோன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இவர் தவறான செய்திகளை பிரசுரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புலிசார்பு ஊடகமான தமிழ்நெற் இணையதளம் இந்த வலையமைப்பின் கீழேயே தனது சேவையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு சிறுவர் படுகொலையுடன் ரிஎம்விபி எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு -பிரதி காவல்துறை மா அதிபர்!
Next post யுத்த சூன்யவலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன –கருணாஅம்மான் தெரிவிப்பு