கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு-ராணுவம் குவிப்பு
Read Time:1 Minute, 21 Second
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆன்டனி ஆகியோரை சுட்டு கொன்று இருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பில் கொரில்லா தாக்குதல் நடத்தலாம், அதற்கான அபாயம் அதிகமிருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது. இதனால் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
Average Rating