பொட்டம்மான், நடேசன் மற்றும் பானு ஆகியோரின் மனைவிமார்களும் கொல்லப் பட்டுள்ளதை இராணுவம் உறுதி செய்தது..!
பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகிளன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், புலிகளின் பொலீஸ்பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும், அரசியல்துறை பொறுப்பாளருமான பா.நடேசன், புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன், புலிகளின் இராணுவப் பிரிவின் பொறுப்பாளர் பானு, ஜெயம், லக்ஸ்மன், புலிகளின் விசேட படைப்பிரிவின்தலைவர் ரமேஸ், புலிகளின் பொலீஸ் பிரிவுப் பொறுப்பாளர் இளங்கோ, சார்ள்ஸ் அன்ரனியின் உதவியாளர் சுதர்மன், சிரேஸ்ட புலனாய்வு பொறுப்பாளர் தோமஸ், சிரேஸ்ட கடற்புலி முக்கியஸ்தர் ஸ்ரீராம், புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் பொறுப்பாளர் இசையருவி, புலிகளின் புலனாய்வுத்துறை பிரதித்தலைவர் கபிலம்மான், புலிகளின் பெண்கள் பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளர் அஜந்தி, புலிகளின் மோட்டார் பிரிவின் பொறுப்பாளர் வர்தா, பிரபாகரரின் செயலர் புதியவன் மற்றும் விசேட படைப்பொறுப்பாளர் ஜனார்த்தன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர். இவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை பொட்டம்மான், நடேசன் மற்றும் பானு ஆகியோரின் மனைவிமார்களும் கொல்லப்பட்டுள்ளதை இராணுவம் உறுதி செய்துள்ளது.
Average Rating