சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் -அரசாங்கம்
சர்வதேச ரீதியாக தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதியை வழங்குதல் அந்த அமைப்பிற்காக நிதிதிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இராஜதந்திர மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த நாடுகளது இலங்கைத் தூதரங்களில் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகளினால் புலிகளுக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
3 thoughts on “சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் -அரசாங்கம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
Good joke
சர்வதேசச் சட்டங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்த
சிறீலங்காவுக்கு, மே 25 ஐநாவின் நோபல் பரிசு
காத்திருக்கிறது. யாப்பா….போப்பா போய்
வாங்கப்பா!!
இப்ப தெரியுதில்லே… பிரபா செத்துட்டான்னு…
அடங்குடா!