ஒஸ்லோ கூட்டத்தில் புலிகள் பங்கேற்பர்
Read Time:43 Second
எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் நோட்டிக் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு புலிகள் இணங்கியுள்ளனர். நோர்வே விடுத்த அழைப்பை புலிகளின் தலைமைப்பீடம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்காக தமது து}துக்குழு நோர்வே செல்லுமெனவும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் வெளிநாட்டு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.