வலிகாமம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி மற்றையவர் காயம்
Read Time:42 Second
யாழ். வலிகாமம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 4.30மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வட்டுக்கோட்டை மூளாய்வீதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான 26வயதுடைய பூர்ணம் சபேசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது நண்பரான 26வயதுடைய திகிலராஜா துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.