நாவாந்துறையில் முன்னாள் மாநகரசபை ஈபிடிபி உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொலை
Read Time:50 Second
யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதியில் வசித்துவரும் மைக்கேல் யேசுதாசன் (வயது 70) என்பவர் இன்று (29.05.2006) நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டு தெரிவான முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், கடந்த 30.03.2006 இல் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருமாவார். இவர் 11 பிள்ளைகளின் தந்தையாவார்.