ஓமடியாமடுவில் 13பேர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 8 Second

Sl.Army.pirasath.jpgபொலநறுவை வெலிகந்தை ஓமடியாமடு ரண்சரத்தனை பகுதியில் கால்வாய் அகழ்வில் ஈடுபட்டிருந்த 13பெரும்பான்மை இனத்தவர் நேற்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10.45மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், அநுராதபுரத்தைச் சேர்ந்த 15பேர் கால்வாய் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதில் 13பேர் பலியானபோது, இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த ஒருவர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் வாழைச்சேனை பொலீசில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வட்டுக்கோட்டையில் இருவர் சுட்டுக்கொலை
Next post கிழக்கில் 13 சிங்களவர்கள் சுட்டுக்கொலை