வவுனியாவில் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக் கொலை
Read Time:51 Second
வவுனியா கூமாங்குளம் முனியப்பர் கோவில் பகுதியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தவராசா என அழைக்கப்படும் செபஸ்ரியான் ராயப்பு (வயது 37) என்னும் குடும்பஸ்தரும், அறிவு என அழைக்கப்படும் ஆறுமுகம் லோகநாதன் (வயது 19) என்பவருமே இச்சம்பவத்தில் பலியாகியவர்கள் ஆகும். இச்சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.