மேலை நாடுகளிலிருந்து அணுஆயுதங்களை பெற முனைந்த புலிகள்!

Read Time:1 Minute, 44 Second

மேலைநாடுகளில் இருந்து அணுஆயுதங்களை புலிகள் பெறமுயன்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கைதாகியுள்ள அந்த இயக்கத்தின் புதிய தலைவர் கே.பி. என்று அறியப்படும் செல்வராசா பத்மநாதன், தன்னிடம் விசாரணை நடத்திவரும் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் இத்தகவலை நேஷன் என்ற வாராந்திர செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை பெற முயன்ற முதல் பயங்கரவாத இயக்கம் புலிகள் இயக்கம். அந்த இயக்கம் இதில் வெற்றி பெற்றிருந்தால் மற்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் அது கிடைத்திருக்கும் என்று தனது செய்தியில் இராணுவ வல்லுநர்களை மேற்கோள்காட்டி நேஷன் பத்திரிகை கூறியிருக்கிறது. பல்வேறு நோக்கங்களுக்காக செல்வராசா பத்மநாதனை பல நாடுகளின் உளவுத்துறையினர் பயன்படுத்தி வந்திருப்பதாகவும், இலங்கை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரும் அவருக்கு உதவியிருப்பதாகவும், கே.பி.யிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவருக்கு அடுத்தநிலையில் உள்ள நெடியவன் என்பவர் தற்போது நோர்வேயில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் ஜேர்மனியில் உள்ள சிங்கள புலிகளாலேயே விநியோகம்..
Next post மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம்!