விடுதலைப் புலி ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் கைது

Read Time:1 Minute, 11 Second

-ltte.logo1-ltte.gif
விடுதலைப் புலி ் ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வவுனியாவிலிருந்து கொழும்புவுக்கு பேரூந்தில் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு இரகசியப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரட்டைப் பெரியகுளம் சோதனைச் சாவடியில் பேரூந்தை சோதனையிட்டபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலைப் புலிகளுடன் இணைந்ததாகவும் பல்வேறு இடங்களில் கண்ணிவெடிகளை புதைத்தமைக்கு அவர் காரணம் என்றும் வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓஸ்லோ கூட்டத்தில் இருதரப்பும் பங்கேற்கும் சாத்தியம்
Next post ரஷியா-உக்ரைன் எல்லையில் 13 இந்தியர்கள் பிடிபட்டனர் திருட்டுத் தனமாக நுழைந்தவர்கள்