ஓஸ்லோ கூட்டத்தில் இருதரப்பும் பங்கேற்கும் சாத்தியம்
Read Time:1 Minute, 2 Second
நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க சமாதான செயலப் பணிப்பாளர் பாலித கொஹேன தலைமையிலான குழுவினர் பங்குகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் தரப்பில் புலிகளின் அரசியல் பறுப்பாளர் தமிழ்செல்வன் தலைமையிலான குழு பங்கேற்குமென்று தெரிவிக்கப்படுகிறது. அரச தரப்பில் அதிகாரமுள்ள உயர்மட்டக்குழு பங்கு பற்றினால் மாத்திரமே புலிகள் மேற்படி கூட்டத்தில் பங்குபற்றுவது சாத்தியமாகும் என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.