போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு
பலலேகம திறந்த வெளிச் சிறைச்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு முதற் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலை தணைக்களம் தெரிவித்துள்ளது திறந்த வெளிச் சிறைச்சாலையில் தங்கியுள்ள 500 பேர் புனர்வாழ்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் வி.ஆர்.டி சில்வா தெரிவித்தார் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்து மீள்வதற்கு மருந்துகளும் ஆலோசணைகளும் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன போதைப் பொருள் பாவணையிலிருந்து மீண்டவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என்ற தெரிவிக்கப்படுகின்றது இதன் பின்னர் அவர்கள் விடு விடுவிக்கப்படுவார்கள் இதன் இரண்டாவது கட்டம் வீரவில மற்றும் தலதெனிய திறந்த வெளிச்சிறைச்சலையில் இடம்பெறும் எனவும் இதன்படி 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்
Average Rating