ஜெர்மனி ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு: பிரேசில் அணியே `சாம்பியன்’ பட்டம் வெல்லும் என்கிறார்கள்
கால்பந்து திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 9-ந்தேதி ஜெர்மனியில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒருமாத காலம் நடை பெறும் இந்த திருவிழாவை உலகின் தலை சிறந்த 32 அணிகள் கலந்து கொள் கின்றன. இவற்றில் சாம்பியன் பட் டம் வெல்லும் அணிகளுள் பிரேசில், ஜெர்மனி, இங்கி லாந்து ஆகிய அணிகள் திகழ்கின்றன.
போட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஜெர்மனி நகரமே களை கட்ட தொடங்கி உள்ளது.
கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி தற்போது மிகவும் வலிமையாக உள்ளது. அந்த அணியில் ரொல்டினோ, காபூ, ரொனால்டோ, ரோபினா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
இதனால் அந்த அணி 6-வது முறையாக பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் ஜெர்மனி கோப் பையை வெல்லும் என பலர் கருதுகின்றனர்.
இந்த நிலையில் பெர்லி னில் உள்ள ஒரு டெலிவிஷன் நிறுவனம் ஜெர்மனி ரசிகர் களிடையே கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.
சுமார் ஆயிரம் பேரிடம் நடத்திய இந்த கருத்து கணிப்பில் 54 சதவீதம் பேர் பிரேசில் அணி தான் மீண்டும் கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 சதவீதம் பேரே ஜெர்மனி கோப்பையை வெல் லும் என கூறியுள் ளனர். 21 சதவீதம் பேர் ஜெர்மனி இறுதி போட்டி வரை முன்னேறும் என்றும் 14 சதவீ தம் பேர் ஜெர்மனி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறும் என அதிர்ச்சி அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு ஜெர்மனிவீரர்களுக்கு சற்று கவலையை கொடுத் துள்ளது. சொந்த நாட்டு ரசிகர்களே தங்களுக்கு எதிராக கருத்து கூறி உள் ளார்களே என அவர் கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.