முக்கிய பௌத்த பிக்குகள் சிலர் சரத்பொன்சேகாவுடன் விஷேட பேச்சு

Read Time:1 Minute, 49 Second

முக்கிய பௌத்த பிக்குகள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர் மற்றும் எல்லாவெல மேதாந்த தேரர் ஆகியோர் சரத்பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுமார் 1மணிநேரத்திற்கு அதிகமான நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் பொதுவான வேட்பாளராக ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன. அரசியலில் ஈடுபடுமாறு இதுவரையிலும் தமக்கு எவரும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பண மற்றும் அதிகாரபலத்திற்கு ஆசைப்பட்டு தாம் எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அவர் பௌத்த பிக்குகளிடம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருநாகல் ஆங்கில ஆசிரியர் கொலை தொடர்பாக ஆசிரியை கைது
Next post யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்க நடவடிக்கை