வெளிநாடு ஒன்றில் முன்னாள் இராணுவத்தளபதியும் எதிர்கட்சித்தலைவரும் சந்திக்கத் திட்டமா??
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த 23ம் திகதி இரவு வெளிநாடு சென்றவுடன் எதர்கட்சித்தலைவர் நேற்று முன்தினம் வெளிநாடு சென்றுள்ளார் இந்நிலையில் இந்த விஜயங்கள் குறித்து அரசபுலனாய்வுப் பிரிவினர் விஷேட கவனம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது எதிர்கட்சித்தலைவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாய்லாந்து சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் சில தினங்களில் அந்த நாடுகளில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது அமெரிக்கா புறப்பட்டு சென்ற ஜெனரல் சரத்பொன்சேகா ஜப்பானில் சில மனித்தியாலங்கள் தங்கியிருந்ததாகவுத் குறித்த காலத்தில் வர்த்தக வகுப்பில் வெளிநாட்டு முக்கியஸ்தர் ஒருவரையும் இலங்கையை சேர்ந்த சிலரையும் சந்தித்திருப்பதாக தெரியவருகிறது இருப்பினும் சரத்பொன்செகா நாடுதிரும்பும் நிலையில் அல்லது திரும்பும் வழியில் வெளிநாட்டு விமான நிலையத்தில் எதிர்கட்சித்தலைவரை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறதா என தற்போது இலங்கை அரசாங்கமிடையே குழப்பநிலையொன்று தோன்றியுள்ளது.
Average Rating