யாழ். கைதடியில் கணவரால் மனைவி குத்திக் கொலை
Read Time:59 Second
யாழ்ப்பாணம் கைதடிப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 7.30அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரே தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமென்று கூறப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். வைத்தியசாலைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
One thought on “யாழ். கைதடியில் கணவரால் மனைவி குத்திக் கொலை”
Leave a Reply
You must be logged in to post a comment.
Mangalyam thanthuna nena Mamajeevana hetuna Kante badhrani shubage Thwam deeya sharadam shubam