வாழைச்சேனையில் இரு புலிகள் சுட்டுக்கொலை
Read Time:55 Second
வாழைச்சேனை கல்மடு வீட்டுத் திட்டத்தில் நேற்று மாலை (05-06-2006) 4.30 மணியளவில் புலிகள் இராணுவத்தினர் மீது கிளேமோர் தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தபோது தகவல் கிடைத்த இராணுவத்தினர் அங்கு சென்றவேளையில் புலிகள் கிளேமோர் வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் அவர்களை துரத்திச் சுட்டதில் புலிஇயக்கத்தவர்கள் இருவர்; சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பிஸ்டல், கைக்குண்டு, வோக்கி டோக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது