யாழ் காணாமற்போன பூசகரின் சடலம் மீட்பு
Read Time:48 Second
யாழ் மாவட்டம் கைதடி கோப்பாய் வீதியில் கோப்பாய் பாலத்திற்கு சமீபமாக பூசகர் ஒருவரின் சிதைவடைந்த சடலம் 06.06.2006 பிற்பகல் மீட்கப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் 26.05.2006 அன்று காணாமற்போன கோப்பாய் மத்தியைச் சேர்ந்த வைத்தீஸ்வர சர்மா வெங்கடகிருஷ்ண சர்மா (வயது 50) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோப்பாய் பாலத்திற்கு அருகில் மண் ஏற்றுவதற்காகச் சென்றவர்களே உருக்குலைந்த நிலையில் சடலத்தை கண்டு சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.