திண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி

Read Time:1 Minute, 58 Second

Tamilnadu.1.jpgதிண்டிவனம், கூட்டேரிபட்டு அருகே ஆட்டோவில் சென்ற 5 பேர் கிணற்றில் விழுந்து பலி.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கூட்டேரிபட்டு அருகே உள்ளது. சின்னநெற்குணம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 6 வாலிபர்கள் புதவைக்கு சென்று திரும்பிய போது கூட்டேரிபட்டில் இறங்கி தங்கள் ஊரான சின்னநெற்குணத்திற்கு ஆட்டோ பிடித்து சென்றனர். அப்போது சின்ன நெற்குணத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மணி மீது மோதியதில் ஆட்டோ சற்று திரும்பியதால் சாலையின் ஓரத்தில் இருந்த தரைக் கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு(21), சுப்ரமணி மகன் அய்யனார்(21), ஜெகதீசன் மகன் சிவக்குமார்(20), ஏழுமலை மகன் ஜெயமூர்த்தி கோபால் மகன் பொன்னியப்பன் ஆகிய 5 பேர்களும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் இவர்களுடன் சென்ற பஞ்சவர்னத்தின் மகன் ஞானவேல்(20) மட்டும் உயிர் பிழைத்துள்ளார். இதில் சாலையில் நடந்து சென்ற உமாவிற்கும் நீரில் மூழ்கி உயிர் பிழைத்த ஞானவேலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.
Next post பிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.