பிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

Read Time:1 Minute, 11 Second

Batticallo_03.gifமட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிந்திக் கிடைத்த தகவலின்படி புலிகளின் துணைப்படைப்பயிற்சியை முடித்து விட்டு கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் திரும்பிய பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவரெனவும் இவ்விபத்தின் போது இரண்டு புலிஉறுப்பினர்களும் பலியானதாகவும் ஊர்ஐpதமற்ற செய்திகள் மூலம் தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி
Next post அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு