பிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.
Read Time:1 Minute, 11 Second
மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிந்திக் கிடைத்த தகவலின்படி புலிகளின் துணைப்படைப்பயிற்சியை முடித்து விட்டு கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் திரும்பிய பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவரெனவும் இவ்விபத்தின் போது இரண்டு புலிஉறுப்பினர்களும் பலியானதாகவும் ஊர்ஐpதமற்ற செய்திகள் மூலம் தெரியவருகின்றது.