தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

Read Time:2 Minute, 56 Second

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியை, கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது பெண்ணுறுப்பை, மெல்லிய இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியா ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. தன்பாத்நகரைச் சேர்ந்தவர் சாபித்ரி. இவரது கணவர் சன்னிமார் முண்டா. சம்பவத்தன்று தனது தாய் வீட்டுக்குப் போக விரும்பி கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார் சாபித்ரி. ஆனால் போகக் கூடாது என்று முண்டா கூறியுள்ளார். ஆனால் பிடிவாதமாக போவேன் என கூறியுள்ளார் சாபித்ரி. இதனால் கோபமடைந்த முண்டா, உனக்கு அங்கு கள்ளத் தொடர்பு உள்ளது. அதனால்தான் போகத் துடிக்கிறாய் என்று ஆவேசமாக கூறியபடி கை, கால்களை கட்டிப் போட்டார் முண்டா.

பின்னால் கட்டுமானப் பணிகளின்போது இரும்புக் கம்பிகளை கட்ட பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புக் கம்பியை எடுத்து, தனது மனைவியின் பெண்ணுறுப்பை தைத்துள்ளார் அந்தக் கொடூரக் கணவன்.

அதன் பிறகும் மூர்க்கத்தனம் குறையாமல், மனைவியை வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியேறினார். கணவன் போன பிறகு மிகவும் சிரமப்பட்டு கதவை உடைத்து வெளியேறிய சாபித்ரி தனது தாய் வீட்டுக்கு ஓடினார்.

அங்கு நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சாபித்ரியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் சாபித்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் பிரதீபா ராய் தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்து கம்பிகளை அகற்றியது. சாபித்ரியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மிருகத்தனமாக நடந்து கொண்டு விட்டு தலைமறைவாக உள்ள முண்டாவைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

Leave a Reply

Previous post ஆஸ்திரேலிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பன்றிக் குட்டி
Next post உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)