சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர் மட்டத்திலான பேச்சுக்கே தாம் தயாரென புலிகள் தெரிவிப்பு
Read Time:1 Minute, 18 Second
சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதானால் அரசின் சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர்மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மட்டுமே தாம் பங்குகொள்ளத் தயாரெனவும் தமிழ்செல்வன் நோர்வேயில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுடன் மட்டுமே தாம் பேசமுடியுமெனக்கூறும் சுப்பையா பரமு தமிழ்செல்வன் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான குழுவினருடன் பேசுவதற்கு முன்வருவாரா?
புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போன்று பங்கருக்குள் பதுங்கியிராது மக்கள் மத்தியில் தமது அரசியலை முனனெடுக்கும் அமைச்சராக அவர் செயற்படுவதால் அவருடன் பேசுவதற்க புலிகள் முன்வரும் பட்சத்தில் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்க அரசாங்கம் தயாரென அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.