ஈராக் அல் கொய்தா தலைவர் அல் சர்காவி விமானப்படை தாக்குதலில் மரணம்
Read Time:58 Second
அமெரிக்கா மற்றும் ஈராக் நாட்டு ராணுவம் சேர்ந்து நடத்திய விமானப்படை தாக்குதலில், ஈராக் நாட்டின் அல் கொய்தா தலைவர் அல் சர்காவி கொல்லப்பட்டார். இத்தகவலை ஈராக் பிரதமர் நௌரி அல் மலிகி தெரிவித்தார். இச்சம்பவம் பாக்தாதிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தில்யா என்ற பகுதியில் நடந்தது.
இச்சம்பவத்தில் சர்காவியின் ஏழு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
கை ரேகை தடயம் மற்றும் முக அமைப்பு ஆகியன இறந்த நபர் சர்காவி என்பதை உறுதிப்படுத்தியது. சர்காவி ஜோர்டான் நாட்டில் பிறந்தவர்.