வறிய மக்கள் வெளியேற்றப்படுவர்கள் என்ற ஐ.தே.கவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை–கோதபாய..!
வறிய மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேரிப்புறங்களில் வாழும் வறிய மக்களை அந்த இடங்களிலிருந்து அகற்றி வசதியான இடங்களில் தங்க வைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேரிப்புறங்களில் வாழ்ந்து மக்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது வெறும் இடங்களுக்கோ வெளியேறிச் செல்லுமாறு அரசாங்கம் உத்தரவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளை தடுக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வறிய மக்களை வீதிகளில் நிர்க்கதியாக்கும் திட்டம் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையும், காவல்துறையினரும் இணைந்து இந்தத் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் சேரிப்புற மக்களுக்கு போதியளவு வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் வாழ்ந்து வரும் 67000 வறிய குடும்பங்களை அரசாங்கம் வேறும் பிரதேசங்களுக்கு வெளியேற்றி செல்வந்தர்களுக்கான இருப்பிடங்களை அந்தப் பிரதேசங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating