ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாடு தென்கொரியாவில் ஆரம்பம்..!
Read Time:1 Minute, 17 Second
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாட்டையொட்டி நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து தெரிவிக்கையில், “ஜீ-20 நாடுகளின் தலைவர்கள் பொருளாதார மீட்பு தொடர்பில் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்தேச பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான பொறிமுறைகளை இம்மாநாடு உள்ளடக்கியிருக்கும்” என்றார். இந்த உச்சிமாநாட்டில் நாணயம் மற்றும் வாணிப சமத்துவமின்மை என்பன குறித்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என தென்கொரிய நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீ-20 மாநாட்டில் பொருளாதார முன்னணி நாடுகள் 19 மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்கின்றன.
Average Rating