ஒற்றுமையாகு​ங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்க​ள் இறுதி எச்சரிக்கை​ -தமிழீழ எல்லாளன் படை

Read Time:2 Minute, 42 Second


தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பு முழுமையான ஒன்றிணைந்த இயக்கமாக செயற்பட மறுத்து தான்தோன்றித்தனமாக அனைவரையூம் புறந்த்தள்ளி தாமே தமிழீழ விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும் தனித்துச் செயற்பட முடிவு செய்துள்ளதாக அறிகின்றோம். 31.12.2012 க்குள் நாம் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில அமைப்புக்கள் எமக்கு ஆக்கபூர்வமாக தெரிவித்திருந்தனர்.

அனைத்துலக கட்டமைப்பு மட்டுமே மௌனத்தேய பதிலாக காட்டியுள்ளதால் நாம் இவர்களுக்கு எதிரான முழு நடவடிக்கையை ஆரம்பிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இதன் முதற் கட்டமாக தன்னை ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் இரும்பொறை மற்றும் குழப்பங்களின் காரணியாக கருதப்படும் குட்டி எனப்படும் விடுதலை, நிதிப்பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ள ஈரோஸ் முரளி, ஆலோசனைகளை கூறுவதாக கூறி குழப்பங்களை விளைவிக்கும் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் மற்றும் றூட் ரவி, தனம் போன்றவர்களை தேசியச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் ஒற்றுமையை விரைவு படுத்த ஒரே இயக்கமாக ஒரே கொள்கையுடன் செயற்ப்பட பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கிறோம். மாவீரர்களின் தியாகத்தில் நின்று விடுதலையை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை நாம் தண்டிக்க தயங்கப் போவதில்லை.

2013ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் புதிய செய்தியைக் கொடுக்கும் ஆண்டாக அமையும்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

த.மணியரசன்
நடவடிக்கைப் பொறுப்பாளர்
தமிழீழ எல்லாளன் படை
தமிழீழம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..