நிவாரணம் வழங்குவதில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு
Read Time:1 Minute, 25 Second
மழை வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களுக்கு நிவாரணம் அனுப்பி வைக்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுகின்றது. இந்தவகையில் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கிராமமான முசலி பகுதிக்கு பெருமளவூ உணவூப் பொருட்கள் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் சிறியளவே மிகவூம் பாதிக்கப்பட்டுள்ள குஞ்சுக்குளம் மாதா கிராமம், பெரியமுறிப்பு உள்ளிட்ட கிராமங்களுககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மிகச்சொற்பமான நிவாரணப் பொருட்களே அனுப்பி வைக்கப்பட்டதால் அவற்றை பகிரமுடியாத நிலை ஏற்பட்டதாகவூம் அதனால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகவூம் குஞ்சுக்குளம் கத்தோலிக்க தேவாலய பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
Average Rating